தொண்டியில் மரக்கன்று நடும் விழா

தொண்டி, அக்.17: அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் தொண்டி மகாசக்திபுரம் கடற்கரை பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.ஜாமுகைதீன் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் மரகன்றுகளை நட்டார். பசுமை புரட்சி அணி மாவட்ட செயலாளர் உதயக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். ஆன்மீக அணி மாவட்ட செயலாளர் ரெத்தினம், ஒன்றிய அமைப்பாளர் பால்சாமி, நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு 250 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Related Stories: