ராமநாதபுரம், அக்.17: ராமநாதபுரம் அருகே கணவரை அரிவாளால் வெட்டி மனைவியிடம் தாலிச்செயினை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (35). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (31). கடந்த சில மாதங்களுக்கு முன் திருமலை ஊர் திரும்பினார். நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் ராமநாதபுரம் வந்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அழகன்குளம் நதிப்பாலம் அருகே வந்த போது, மர்மநபர்கள் 3 பேர் வழிமறித்து திருமலையின் கழுத்தில் அரிவாளை வைத்து அவரது மனைவி அணிந்திருந்த தாலி செயினை கழற்றி திருமாறு கேட்டுள்ளனர்.