ஆர்.எஸ்.மங்கலம், அக்.17: ஆர்.எஸ் மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழைக்கு விவசாய பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. விவசாயிகள் களை நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையால் விவசாயிகள் பணிகளை துவக்கினர். தற்போது ஓரளவு பயிர்கள் முளைத்து விட்டது. எனவே களையை கட்டுப்படுத்தும் விதமாக களைக் கொல்லி மருந்துகளை வாங்கி வயல்களில் அடித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த மூன்று ஆண்டுகளாக சரிவர பருவமழை இல்லாத காரணத்தால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பல வகையிலும் நஷ்டத்தில் கஷ்டத்தில் இருந்தனர். இந்த ஆண்டு விவசாயத்தில் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.