கருங்கல், அக். 17:கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்போஸ்கோ. இவரது மனைவி புஷ்பராணி. இவர்களது வீடு கருங்கல் - திங்கள்சந்தை சாலையில் அமைந்துள்ளது. கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை பயங்கர இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது வீட்டில் ஜாண்போஸ்கோவின் தாயார் மற்றும் 2 பிள்ளைகள் மட்டும் இருந்தனர். இடி மின்னலுடன் மழை பெய்ததால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், ஜாண்போஸ்கோவின் வீட்டை மின்னல் தாக்கியது.