நாகர்கோவில்,அக்.17: குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான ரோட்டராக்ட் கிளப்பை, ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் ஹெரிட்டேஜ் தொடங்கியது. நாகர்கோவில் ஹெரிட்டேஜ் ரோட்டரி கிளப் தலைவர் சுரேந்திரா தலைமை வகித்தார். கிளப் செயலாளர் சோனியா வரவேற்றார். ரோட்டரி கிளப் துணை ஆளுநர் ஆன்ட்ரு சிறப்பு விருந்தினராக கலந்து ெகாண்டு மாணவி அனு கோபிகாவுக்கு ரோட்டராக்ட் கிளப் தலைவிக்கான காலரை அணிவித்து பதவி ஏற்க வைத்தார்.