குமரி மாவட்டபனை வெல்ல கூட்டுறவு தேர்தலில் திமுக அணி வெற்றி

குலசேகரம்,அக்.17: கன்னியாகுமரி மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவராக அதிமுக வை சேர்ந்த திருவட்டார் ஒன்றிய செயலாளர் திலக்குமார் இருந்து வந்தார். தற்போது இங்கு நடைபெற்ற  தேர்தலில் திமுக, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியாக போட்டியிட்டனர்.இதில் இந்த அணியை சேர்ந்தவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இதனையடுத்து  திமுகவை சேர்ந்த டாக்டர். சி. லாரன்ஸ் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பி. மணி  துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக அணி தோல்வியை சந்தித்தது .வெற்றி பெற்றவர்கள் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ வுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர் இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ததேயு பிரேம் குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார்,மாநில பேச்சாளர்  எஸ்.ஆர். சினி,குழித்துறை நகர தொண்டரணி அமைப்பாளர்  ஷாஜி லால்,குழித்துறை நகர துணை செயலாளர்  ரஹீம்,மாநில பேச்சாளர்  என்.ஆர். மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: