குலசேகரம்,அக்.17: கன்னியாகுமரி மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவராக அதிமுக வை சேர்ந்த திருவட்டார் ஒன்றிய செயலாளர் திலக்குமார் இருந்து வந்தார். தற்போது இங்கு நடைபெற்ற தேர்தலில் திமுக, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியாக போட்டியிட்டனர்.இதில் இந்த அணியை சேர்ந்தவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இதனையடுத்து திமுகவை சேர்ந்த டாக்டர். சி. லாரன்ஸ் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பி. மணி துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.