நாகர்கோவில், அக்.17 : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் 20 சதவீத கருணைத்தொகை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கேற்ப, அரசியல் கட்சி பெயரில் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே பகுதியில் அதிகப்படியான கடைகளை திறப்பதை கைவிட்டு, குறைவாக விற்பனை நடைபெறும் கடைகளை இடமாற்ற வேண்டும்.
குடோனில் இருந்து மதுபான பெட்டிகளை கடை களுக்கு கொண்டு செல்லும் ஒப்பந்ததாரரே சுமை தூக்கும் தொழிலாளர்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்ற உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்க மோகன் தலைமை வகித்தார். செயலாளர் அசோக்குமார், பொருளாளர் மரியதாஸ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.