கருங்கல், அக்.17 : கருங்கல் - மார்த்தாண்டம் சாலையில் கிள்ளியூர் எம்எல்ஏ அலுவலகம் எதிரே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது. அதில் கழிவு நீரும் கலந்து செல்கிறது. இதனால் மழை காலத்தில் கழிவுகள் அதிகளவில் வந்து அடைப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அடைப்பை சரி செய்வதற்காக தற்போது இருக்கும் பாலத்தை துண்டித்து புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி அந்த ரோட்டை துண்டித்து பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த ஓடையில் மழை நீருடன், கழிவு நீரும் அதிகளவில் கலந்து பாலம் கட்டுவதற்காக ேதாண்டப்பட்ட பள்ளத்தில் சேர்ந்தது. சகதியும், கழிவு நீரும் நிரம்பி இருந்ததால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.