அரசு பள்ளியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிப்பு

நாமகிரிப்பேட்ைட, அக்.16:நாமகிரிப்பேட்டை அருகே அரசு பள்ளியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. சரியான முறையில் கை கழுவாமையினால் வயிற்றுப்போக்கு, சீதபேதி, காய்ச்சல் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. அனைவரும் முறையாக கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது

மேலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஒவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் துரை, வினோத் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: