நாமக்கல், அக்.16: நாமக்கல்லில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமையில் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்லபிரசாத் கலந்து கொண்டு பேசியதாவது: பாஜ கட்சி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை காங் கட்சியினர் விளக்கி வருகிறார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. பாஜவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியா முழுவதும் பாஜ அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது எதிரொலிக்கும்.