காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

நாமக்கல், அக்.16: நாமக்கல்லில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமையில் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்லபிரசாத் கலந்து கொண்டு பேசியதாவது: பாஜ கட்சி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை காங் கட்சியினர் விளக்கி வருகிறார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. பாஜவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியா முழுவதும் பாஜ அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது எதிரொலிக்கும்.

தமிழக வாக்காளர்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். பாஜவை தூக்கி எறிய தமிழக மக்கள் நேரம் பார்த்து இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இவ்வாறு  சிரிவெல்லபிரசாத் தெரிவித்தார்.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி உறுப்பினர் முன்னாள் எம்.பி.ராணி, மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், சீனிவாசன், நகர தலைவர் ராம்குமார் மற்றும் வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: