திருச்செங்கோடு, அக்.16: திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் மற்றும் விவேகானந்தா மருத்துவமனை இணைந்து, தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன் முன்னிலை வகித்தார். டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், டாக்டர் கிருபாநிதி ஆகியோர் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் பல் மருத்துவம், கண், இ.சி.ஜி மற்றும் பொது மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளை பரிசோதனை செய்த பின் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 140 நோயாளிகள் பயன் பெற்றனர். டாக்டர் வஜ்ரவேல், சிவராமன் ஆகியோர் முகாமினை ஒருங்கிணைத்தனர். ரோட்டரி சங்க தலைவர் நாகப்பன், செயலாளர் பிரகாசம், பொருளாளர் தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.