தேன்கனிக்கோட்டை, அக்.16: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்த 15 யானைகள் கடந்த ஒரு வாரமாக ஓசூர் அருகே முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வந்தன. மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி அட்டகாசம் செய்யும் யானைகளை ஜவளகிரி காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டார். நேற்று காலை ஓசூர் வனத்துறையினர் 15 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர். பேவநத்தம் காட்டில் சூரப்பன்குட்டையில் அந்த 15 யானைகளும் முகாமிட்டிருந்தன. தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் சென்ற வனத்துறையினர்,