தர்மபுரி, அக்.16: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான ஆயத்த பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான ஆயத்த பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். தேர்தல் வழக்கறிஞர் ஆணையாளர் செல்வகுமார் கலந்து கொண்டு பேசினார்.