தர்மபுரி, அக்.16: தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி, புத்தக கண்காட்சி, பாரம்பரிய உணவுத்திருவிழா மற்றும் வண்ணக்கண்காட்சி நேற்று தொடங்கியது. விழாவிற்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி அறிவியல் கண்காட்சியையும், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி புத்தக கண்காட்சியையும், செந்தில் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி பாரம்பரிய உணவுத்திருவிழாவையும் தொடங்கி வைத்தனர். நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளி முதல்வர்கள் கிஷ்ணவேணி, பழனிசாமி,