தர்மபுரி, அக்.16: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், தர்மபுரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. மாலை 4 மணியளவில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மனோகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கூட்டுறவு துறை, வருவாய்த்துறை, டிஎன்சிஎஸ்சி என 3 துறைகள் உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு என தனியாக துறை நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கி, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்க வேண்டும்.