அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தர்மபுரி, அக்.16: தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அப்துல்கலாம் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது படத்திற்கு பள்ளி மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் தெரசாள், உதவி தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இதே போல் தர்மபுரி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர், பொம்மிடி, கம்பைநல்லூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில்,

அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அப்துல்கலாம் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி ஆகியோர், அப்துல்கலாம் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் செந்தில் பள்ளிகளின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, நிர்வாக அலுவலர் சக்திவேல் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: