களியக்காவிளை, அக். 16: களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் வெளிப்பகுதியில் இரும்பிலான உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கோயில் கமிட்டி நிர்வாகிகள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்த்தபோது கோயிலின் பின் பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல் காலியாக கிடந்தது. இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் பத்மகுமார் களியக்காவிளை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.