கருங்கல், அக். 16: கருங்கல் அருகே தொழிலாளி கொலையில் கைதான உறவினர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கருங்கல் அருகே பாலூர் சேறுகரை பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லெட். இவருக்கு சசிகுமார் (46), ராஜகுமார் (44) என்ற இரு மகன்கள் உண்டு. இருவருக்கும் திருமணமாகி விட்டது. தொழிலாளியான சசிகுமார் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர்களது வீட்டு அருகில் குடும்ப கோயில் உள்ளது. இவர்களின் உறவினர் நேசையன். பாலூர் அணைக்கரை பகுதியில் வசிக்கிறார். இவருக்கு ெஜகதீஷ் (35), மகேஷ் (33) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி ஜெகதீஷ் குடும்ப கோயிலில் வழிபாடு நடத்த வந்தார். அப்போது சசிகுமாரின் குடும்பத்தினருக்கும் ,ெஜகதீசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ஜெகதீஷ் தனது சகோதரர் மகேசிடம் கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த மகேஷ் பாலூர் சேறுகரை பகுதிக்கு வந்து, சசிகுமார் மற்றும் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதில் மகேசுக்கும், சசிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த மகேஷ், சசிகுமாரை அங்கிருந்த உடைந்த சிரட்டையால் குத்தினார்.