விருதுநகர், அக். 16: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, 2,580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,740 வாக்குச் சீட்டு இயந்திரங்கள், 2,580 வாக்கு தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை பெங்களூரு பாரத் எலக்ட்ரிகல் நிறுவனத்திடம் இருந்து கொண்டு வரப்பட்டு, விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள ராமநாதபுரம் வேளாண்மை விற்பனை கூட கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி கடந்த அக்.1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.