ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு

திருவில்லிபுத்தூர், அக். 16: திருவில்லிபுத்தூரில் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன்படி நகரில் சர்ச் பாயிண்ட் அருகே, அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கும், கார்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அறக்கட்டளை தலைவர் ஜெசிலா ஏஞ்சலின், இந்து மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் கிருஷ்ணன், தலைமையாசிரியர் கண்ணன், போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், கோமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று வழங்கினர்.

Related Stories: