பெரியகுளம், அக்.16: பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தனிக்கூலி பணியாளர்களை நிரந்தரப்பணியாளர்களாக மாற்றக்கோரி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த தோட்டக்கலைக்கல்லூரிக்குச் சொந்தமான நிலத்தில் சுமார் 80 தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணியில் இருந்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து தமிழக முதலமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பல முறை பல மனுக்கள் அளித்து தினக்கூலி பணியாளர்களான தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்து வருகின்றனர்.