கஞ்சா விற்றவர் கம்பத்தில் கைது

கம்பம், அக்.16: கம்பம் பழைய போலீஸ் சோதனைச்சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரிடம் இருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட்டனர். அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்ததில், அவர் கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சேர்ந்த சிங்கராஜ் ( 62) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்கராஜை கைது செய்தனர்.

Related Stories: