உத்தமபாளையம் அரசு பள்ளியில் காய்கறி தோட்டம்

உத்தமபாளையம், அக்.16: உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் காய்கறி தோட்டத்தை அமைத்தனர். உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. பள்ளியின் வளர்ச்சிக்காக விழிப்புணர்வுகூட்டங்கள், தூய்மை சுகாதார திட்டங்கள் போன்றவை தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமையில் நடக்கிறது. இதில் முன்னாள் மாணவர்கள் சங்கம், கல்விதொண்டு நிறுவனம், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக காய்கறி தோட்டத்தை அமைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்தையும், மாணவர்களிடையே இயற்கை காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: