வில்லியனூர், அக். 16: வில்லியனூர் அருகே சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூரை சேர்ந்தவர்கள் தேசிங்கு (33), அய்யனார் (34) மற்றும் குமார் (34). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த முரளி (33) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முரளியை இவர்கள் 3 பேரும் மணக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக் கடையில் வைத்து தாக்கி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அன்று மாலை மீண்டும் சாராயக்கடைக்கு வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேசிங்கு, ஐயனார், குமார் ஆகிய மூன்று பேரையும் குத்தியுள்ளார்.