காளையார்கோவில், அக். 16: காளையார்கோவிலில் இருந்து காட்டாத்தி வழியாக பள்ளித்தம்மம் செல்லும் தார்ச்சாலை மழையால் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. காளையார்கோவில் அருகே காட்டாத்தி வழியாகப் பள்ளித்தம்மம் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை சமீபத்தில் பெய்த மழைக்கு நாற்று நடும் வயல் போல் மாறியுள்ளது. இந்த சாலை வழியாக வேம்பனி, அம்மாபட்டினம், உருவாட்டி என பல கிராமத்திற்கான பிராதானச் சாலையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கிராமங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், அதற்கு தேவையான இடுபொருட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு அதிகளவில் இச்சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.