இளையான்குடி, அக்.16: சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு, இளையான்குடியில் வருவாய்த்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாலுகா ஆபீசில் தொடங்கப்பட்ட பேரணிக்கு தாசில்தார் தமிழன் தலைமை தாங்கினார். இளையான்குடி கண்மாய்கரை பகுதி கடந்து பஜார் பகுதிவரை நடைபெற்ற பேரணியில் மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்(தலையாரி) உட்பட அலுவலக பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.