தேசிய யோகா போட்டிக்கு தகுதி

சிவகங்கை, அக். 16: தி ருப்புவனம் பள்ளி மாணவர் தேசிய யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், குமாரபாளையத்தில் மாநில யோகாசன போட்டி கடந்த 13ம் தேதி நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவன் விக்னேஷ் 5 முதல் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் பரிசு பெற்றார். இதையடுத்து லக்னோவில் நடக்க உள்ள தேசிய யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று தமிழ்நாடு அளவில் சாதனை படைத்து வரும் விக்னேஷை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர், யோகா பயிற்சியாளர் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: