தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

கடலூர், அக். 16:  மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது ஊனத்தின் தன்மையை தாமாக முன் வந்து தெரிவிக்கும் பட்சத்தில் அதனை படிவம் 6ல் குறிப்பிட்டு பெற்று அதன் அடிப்படையில்  வாக்கு பதிவு நாளன்று அவர்கள் எளிதில் வாக்குச்சாவடிக்கு சென்று எவ்வித இடையூறுமின்றி வாக்களிக்க போதிய வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம்

தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்த பணி 2019 காலகட்டத்தில்(1-9-2018 முதல் 31-10-2018 வரை) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 20ம் தேதி அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமின் போது வாக்காளராக பதிவு செய்திடாத மாற்றுத் திறனாளிகள் பெயர் சேர்ப்பதற்குரிய போதிய ஆதாரங்களுடன் படிவம் 6யை பூர்த்தி செய்து அளிக்கலாம். மேலும் ஏற்கனவே வாக்காளராக பதிவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் விவரத்தை வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளித்து தங்கள் ஊனத்தின் அளவினை பதிவு செய்து கொள்ளலாம். இதனடிப்படையில் வாக்களிக்க போதிய வசதி செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories: