பண்ருட்டி, அக். 16: கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி காடாம்புலியூரில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஊழல் அதிமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் அறிவழகன், அவைத்தலைவர் ராஜா, துணை செயலாளர் செல்வகுமார், அவைத்தலைவர் சுப்ரமணியன், விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, பொதுகுழு உறுப்பினர்கள் தண்டபாணி, அரிராமச்சந்திரன், பலராமன், தொமுச தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.