புவனகிரி, அக். 16: தெலங்கானா மாநிலம் சூரியாபேட் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(54). இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுள்ளார். பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி கிளியாலம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் சுபாஷ்(54), அவரது மனைவி ஜிடிசா(53), விஜய்பால்(52), அவரது மனைவி விஜயா(50) மற்றும் சுந்தம்மா(52) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.