ராமநாதபுரம், அக்.16: வாலாந்தரவையில் எரிவாயு பம்பிங் ஸ்டேசன் அமைப்பது தொடர்பாக நடந்த அமைதி கூட்டத்தில் கிராமமக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐஓசி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தில் இருந்து தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திற்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பம்பிங் ஸ்டேசன் அமைக்க கடந்த மாதம் பூமிபூஜை போட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது வாலாந்தரவை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் நேற்று மாலை அமைதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்குகாட்டூர் கிராமத்தலைவர் சவுந்தர்ராஜன், முன்னாள் மண்டபம் ஒன்றிய தலைவர் முனியசாமி, வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, வழுதூர் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மூர்த்தி, ராஜா, வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வம்,