தூத்துக்குடி,அக்.16: தூத்துக்குடியில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்தார்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து மகன் சவரிராஜ்(35). இவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் சவரிராஜ், நேதாஜிநகர் பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட சென்றார். அதன் பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.