ரூ.45 லட்சம் முந்திரி மூட்டைகள் திருட்டு

தூத்துக்குடி, அக்.16.  கேரளாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து முந்திரிகளை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனம் இறக்குமதி செய்யப்படும் முந்திரி மூடைகள், தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குடோனை அந்நிறுவன அலுவலர்கள் ஆய்வு செய்தபோது அங்குள்ள ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த 500 முந்திரி மூடைகளை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும்.

இதுகுறித்து குடோன் மேலாளரான ராஜா லாரன்ஸ் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமலை வழக்குப்பதிவு செய்து முந்திரி மூடைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: