கொடை விழா

குளத்தூர்,அக்.16: குளத்தூர் அருகே பிரசித்திபெற்ற துரைச்சாமிபுரம் மணிகட்டி மாடசாமி கோயில் கொடைவிழா நடந்தது.  அதிகாலை விரதம் இருந்த சாமியாடிகள் அருகிலுள்ள சிப்பிகுளம் கடற்கரைக்கு சென்று புனித நீராடி தீர்த்தகுடங்களில் புனித நீர்எடுத்து வந்தனர். தொடர்ந்து மணிகட்டி மாடசாமிக்கு புனிதநீரால் அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மதியம் சைவ அன்னதானம் வழங்கினர். இரவு 12மணிக்கு சாமக்கொடை, சாமியாடி வேட்டைக்கு செல்லுதலை அடுத்து நேர்த்தி கடனாக விடப்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: