களக்காடு அருகே மணல் கடத்த முயன்ற ஜேசிபி, லாரி பறிமுதல்

களக்காடு, அக். 16:  களக்காடு அருகே இடையன்குளம் காட்டு ஓடையில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து களக்காடு இன்ஸ்பெக்டர் சபாபதி, எஸ்.ஐ. லிவிபால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் ஓடையில் ஜே.சி.பி மூலம் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோடியது. இதையடுத்து ஜே.சி.பி., லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

 இதில் மணல் கடத்தலில் ஈடுபட்டது பட்டங்காட்டை சேர்ந்த முருகன் மகன் ஜெகன் (30), ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (33), கோவில்பத்தை சேர்ந்த விஸ்வநாத் மகன் மகேஷ் (23), இடையன்குளத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் ராபின் (30), உலகன்குளத்தை சேர்ந்த யோனோப் (40) மற்றும் 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: