வீரவநல்லூர், அக். 16: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட இப்போட்டி துவக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரவிசங்கர் தலைமை வகித்தார். முதன்மை மேலாளர்(நிதி) இக்னேஸிஸ்சேவியர், உதவி முதன்மை மேலாளர் மணிமாறன் முன்னில வகித்தனர். சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அதிகாரி ஜெயராஜ் பேசினார். சிறந்த கண்டுபிடிப்புகள் படைத்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. இதில் 29 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் 85 கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செந்தில்குமார், தங்கரத்னா, பாலசுப்பிரமணியன் செய்திருந்தனர்.