மண்டல தடகள போட்டி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

தென்காசி, அக். 16:  தூத்துக்குடியில் நடந்த மண்டல தடகள போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

 தூத்துக்குடி எஸ்டிஏடி விளையாட்டு மைதானத்தில் மண்டல தடகள விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுருதிகா ஜூனியர் பிரிவில் குண்டு எறிதலில் வெற்றி பெற்றார்.

மேலும், மாணவர்கள் ஜூனியர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் முகமது மீரான் 200 மீ ஓட்டத்திலும்,  மாணவர் வெங்கடேஷ் உயரம் தாண்டுதலிலும், மாணவர்கள் நவீன் வேலாயுதம், முகமது மீரான், பரத், வெங்கடேஷ் ஆகியோர் தொடர் ஓட்டத்திலும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாதனை படைத்த இவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், இசக்கித்துரை, ராஜபாண்டி, பால்மதி, வெங்கடேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: