தென்காசி, அக். 16: தென்காசி பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் பிடிபட்ட மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ஆய்க்குடி பகுதியில் பூட்டி கிடந்த வீடுகளில் பூட்டை உடைத்து பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதில் ஈடுபட்டதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் செங்கோட்டை விசுவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அஜி என்ற அஜ்மீர் காஜாஷெரீப் (27), கீழபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஸ்தபா கமால் (28), மேலூர் கே.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த காதர் மைதீன் ஆகிய மூவரையும் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ஏட்டுகள் மாரியப்பன், மஜீத், வடிவேலு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையின் போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.