புழல் சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்

புழல், அக். 16: புழல் சிறையின் கழிவறைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன் மற்றும் சார்ஜரை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணை பிரிவில் இருக்கும் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக, நேற்று முன்தினம் இரவு சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஜெயிலர் உதயகுமார் மற்றும் சிறை காவலர்கள், கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு அறைக்குள் இருந்த கழிவறையில், ஒரு செல்போன், சார்ஜர், சிம் கார்டு மற்றும் பேட்டரி ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மேற்கண்ட அறையில் ராயப்பேட்டையை சேர்ந்த விமலநாதன் (எ) சைக்கோ விமல் (27) என்பவர் இருப்பதும், இவர்தான் செல்போன் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயிலர் உதயகுமார் அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதி சைக்கோ விமலிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றன

Related Stories: