ஏர்போர்ட்டில் ₹8.5 லட்சம் சவுதி ரியால் பறிமுதல்

சென்னை, அக்.16: சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில், சென்னையை சேர்ந்த முகமது ஜான் பாஷா (28) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் செல்ல வந்தார்.  அவரது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்தபோது, அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதை திறந்து சோதனை செய்தபோது, இந்திய மதிப்பு ₹8.5 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பிறகு கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, முகமது ஜான் பாஷாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: