கொடுங்கையூர், அக்.15: சென்னை கொருக்குப்பேட்டை எழில்நகரை சேர்ந்தவர் ராஜி (49). இவர்களது மகள் ராதிகா (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்தவர் தர் (24). இவரும், ராதிகாவும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தர் வீட்டுக்கு ராதிகாவின் தாய் ஆனந்தி சென்றார். அங்கு தனது மகளுடன் பேச கூடாது என கூறி தகராறு செய்துள்ளார். மேலும், தரின் செல்போனை பறித்து கொண்டு சென்றுவிட்டார். இதைதொடர்ந்து தர், நேற்று முன்தினம் இரவு தனது செல்போனை வாங்குவதற்காக, ராதிகா வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது தந்தை ராஜிக்கும், தருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜி, வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து, தரை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், தலைமறைவாக இருந்த ராஜியை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.