மேச்சேரி, அக்.12: சேலம் அடுத்த மேச்சேரியில் 4.5 டன் குட்காவுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட லாரி டிரைவரை, 2 நாள் காவலில் எடுத்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வெள்ளப்பம்பட்டியில், கடந்த 15 நாட்களுக்கு முன் கர்நாடகா பதிவெண் கொண்ட லாரியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 150 மூட்டையில் இருந்த ₹50 லட்சம் மதிப்பிலான 4.5 டன் குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், லாரியை ஓட்டி வந்தது வெள்ளப்பம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பதும், லாரியின் உரிமையாளர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.