சேலம், அக்.12: சேலம் மாநகராட்சி, ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மின் தடை, பழுது சரி செய்ய இலவச தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதுகுறித்து சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் கூறியிருப்பதாவது: அடிக்கடி மரம் உடைந்து மின் தடை ஏற்படும் ஏற்காடு மலைப்பகுதிக்கு, இரண்டு மின் மர அறுவை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 69 பிரிவு அலுவலகங்களுக்கு உயரமான மரம் மற்றும் மரக்கிளைகள் அகற்றும் கருவி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பணியாற்ற அனைத்து களப்பணியாளர்களுக்கும் கையுறையும், இடுப்பு கயிறு மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பட்சத்தில், மின்தடையை உடனுக்குடன் சரி செய்ய, சேலம் மின்பகிர்மான வட்டத்தில் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து துணை மின் நிலையங்களிலும்,