தாரமங்கலம், அக்.12: தாரமங்கலத்தில் மாணவிகளை தினமும் கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளை, காலை, மாலை நேரத்தில் வாலிபர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பேரில்,