சாலையை விரிவு படுத்த திமுக., எம்எல்ஏ கோரிக்கை

கிருஷ்ணகிரி, அக்.12: கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ., செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில், ஏராளமான அரசு அலுவலகங்கள், அலுவலர்கள் குடியிருப்புகள், பெட்ரோல் பங்க்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 6 வழிச்சாலை மேம்பாலம் அருகில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, ராயக்கோட்டை 6 வழிச்சாலை மேம்பாலம் முதல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் வரை உள்ள சாலையை நான்கு வழிச்சாலை அளவிற்கு விரிவுப்படுத்தி, சாலையில் சென்டர் மீடியன் அமைத்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாமல் சென்று வர போதிய வசதி செய்து கொடுக்கும்படி நெடுஞ்சாலைத்துறை மற்றும் கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: