இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

சேலம், அக்.12:  சேலம் அரிசிப்பாளையம் சாமிநாதபுரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான குடோனில் இருந்த ₹8 லட்சம் மதிப்புள்ள எல்இடி டிவிக்களை, அதே பகுதியை சேர்ந்த சிலர் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சபீர் என்பவர் உள்பட 6 பேர், கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு, சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது அவர் கமுதியில் பணியாற்றி வருகிறார். சம்மனை பெற்றுக்கொண்ட அவர் சாட்சியம் அளிக்கவரவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு சாட்சி வாரண்ட் பிறப்பித்து, நீதித்துறை நடுவர் சிவா உத்தரவிட்டார்.

Related Stories: