மன்னார்குடி, அக். 12: கோட்டூர் வட்டாரத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கு பெற திருவாரூர் மாவட்ட வேளாண்மை இயக்குனர் சந்துரு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கோட்டூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தின் சார்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கு பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து கோட்டூர் கடை வீதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வேளாண்மை இயக்குனர் சந்துரு பங்கேற்று பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்.