கட்டிமேடு அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருத்துறைப்பூண்டி, அக்.12: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் பாலு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல்முனாப், கட்டிமேடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்ஜோதி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பிரசன்னா வரவேற்றார். டாக்டர் முகமதுஆரிப் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வள மேலாண்மை, விவசாயம் மற்றும் கரிம வேளாண்மை  சுகாதாரம் மற்றும் தூய்மை, கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ,கணித மாதிரிகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் காட்சிப் பொருள் அமைத்திருந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் அருளானந்தசாமி , பொருளாளர் பக்கிரிசாமி கலந்துகொண்டனர். ஆசிரியர் ராஜேஷ்குட்டி நன்றி கூறினார்.

Related Stories: