குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காரைக்கால்,அக்.12: காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் சார்பாக காரைக்கால் பழைய ரயில்வே நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன தலைவர்  சுப்ரமணியன் தலைமை வகித்தார், கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர், ஆர்ப்பாட்டத்தில் 1.1.2004க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட மற்றும் பணி நிரந்தரம் செய்யப்பட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும்,  7வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியுத்தப்பட்டது.

Related Stories: