கரூர், அக.12: தகவல்பெறும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆண்டுதோறும்அக்டோபர் 5ம்தேதி முதல் 12ம்தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை கரூர் பேருந்துநிலையத்தில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார்.